புதுச்சேரி: பிப்ரவரி இறுதியில் புதுச்சேரி இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என சபாநாயகர் செல்வம் தகவல் தெரிவித்துள்ளார். பிப்ரவரி இறுதியில் சட்டசபை கூட்டம் நடத்தி இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுவை சட்டசபைக்கு புதிய கட்டடம் கட்ட அமைச்சர் அமித்ஷா அடிக்கல் நாட்டுகிறார் எனவும் சபாநாயகர் செல்வம் தெரிவித்துள்ளார்.