சென்னை: பொங்கல் பண்டிகையான நேற்று முன்தினம் காலை 7 மணி முதல் காலை 9 மணி வரை சென்னை விமான நிலைய பகுதியில் மூடுபனி ஏற்பட்டது. இதனால் அதிகாரிகள் அந்த நேரத்தில் சென்னையில் தரையிறங்க வந்த லண்டன், சிங்கப்பூர், கோலாலம்பூர், இலங்கை, குவைத், மஸ்கட், டெல்லி, கொல்கத்தா, மும்பை, புனே, செங்காடு ஆகிய 12 விமானங்களை ஐதராபாத், பெங்களூரு, திருவனந்தபுரம், திருச்சி, கோவை ஆகிய விமான நிலையங்களுக்கு திருப்பி அனுப்பினர். சென்னைக்கு வரவேண்டிய 28 வருகை விமானங்கள், 40 புறப்பாடு விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டன. பனிமூட்டம் காரணமாக டெல்லி, மும்பை, இலங்கை ஆகிய இடங்களுக்கு செல்லும் 8 விமானங்கள் ரத்து செய்யப்பட்டது. மூடுபனி விலகியபின் விமான சேவை மீண்டும் தொடங்கியது. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.