புதுடெல்லி: இஸ்ரேல் -ஹமாசுக்கு எதிரான போரில் ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக ஈரானின் ஆதரவு பெற்ற ஹவுதி படைகள் களமிறங்கியுள்ளன. செங்கடலை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியாக இந்த வழியாக செல்லும் இஸ்ரேல் ஆதரவு நாடுகளின் வர்த்தக கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் செங்கடல் பிரச்னைகளை அடுத்து வர்த்தகத்தில் முன்னோக்கி செல்வதற்கான வழிகள் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக உயர்மட்ட அதிகாரிகள் ஆலோசனை கூட்டத்துக்கு வர்த்தக அமைச்சகம் அழைப்பு விடுத்துள்ளது.
வருகின்ற 17ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ள இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக வெளியுறவு துறை அமைச்சகம், பாதுகாப்பு, கப்பல் மற்றும் நிதி சேவைகள் துறை மற்றும் வர்த்தகம் ஆகிய ஐந்து துறைகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.