நாகர்கோவில், ஜன.13: கன்னியாகுமரி மாவட்ட சதுரங்க கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: நாகர்கோவில் வடிவீஸ்வரம் தங்கவேல் திருமண மண்டபத்தில், இன்று (13ம் தேதி) மாநில போட்டிக்கான தேர்வு நடைபெற உள்ளது. இதில் 7, 9, 11, 13 வயதிற்குட்பட்ட பிரிவுகளாகவும், வயது வரம்பின்றி பொது பிரிவாகவும், தேர்வு நடைபெறும். போட்டி தேர்வு காலை 9.30 மணிக்கு தொடங்கும். பொது பிரிவு மற்றும் சிறுவர், சிறுமியர் பிரிவில் ஒவ்வொரு பிரிவிற்கும் முதல் முதல் 10 இடங்களை பெறுபவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும். 9, 13, 17, 25 வயதிற்குட்பட்ட பிரிவில் தலா இரண்டு வீரர், வீராங்கனைகளும், பொது பிரிவில் 4 வீரர்கள் மற்றும் வீராங்கனைளும் மாநில போட்டிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மாநில சதுரங்க போட்டிக்கான தேர்வு இன்று நடக்கிறது
previous post