புதுச்சேரி: புதுச்சேரியில் பொங்கல் பரிசுக்கு கூடுதலாக ரூ. 250 வழங்க முதலமைச்சர் ரங்கசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார். ஏற்கனவே ரூ.500 வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டிருந்த நிலையில் , கூடுதலாக ரூ.250 வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் பொங்கல் பரிசு பொருட்களுக்கு பதிலாக பயனாளிகளின் வங்கி கணக்கில் ரூ.750 வரவு வைக்கப்படுகிறது.