சென்னை: சென்னை குன்றத்தூர் அருகே உள்ள தனியார் இரும்பு கழிவு பொருட்கள் தரம் பிரிக்கும் கிடங்கில் பயங்கர தீ விபத்து. உள்ளே இருந்த சிலிண்டர்கள் வெடித்து சிதறியதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.