சென்னை : அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் புதிதாக மனு தாக்கல் செய்துள்ளார். அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நீட்டிக்க எதிர்ப்பு தெரிவித்து அவர் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜிக்கு எதிராக ஆவணங்களை அமலாக்கத்துறை திருத்தம் செய்துள்ளதாகவும் கைது நோக்கத்தில் விதிகளை மீறி போலியாக ஆவணங்களை அமாலக்கதுறை தயாரித்துள்ளதாகவும் மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜியின் மனுவுக்கு அமலாக்கத்துறை ஜனவரி 22-க்குள் பதில் அளிக்க நீதிபதி எஸ்.அல்லி உத்தரவிட்டுள்ளார்.