திருவனந்தபுரம் : சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் கட்டுக்குள் வந்தது. நேற்று 95,000 பேர் சாமி தரிசனம் செய்த நிலையில், இன்று காலை முதல் பக்தர்கள் வருகை 40,000 ஆக சரிவடைந்துள்ளது. நாளை எரிமேலியில் பேட்டை துள்ளல் நிகழ்ச்சியும், 13ம் தேதி பந்தளத்தில் இருந்து தங்க ஆபரண ஊர்வலம் புறப்பாடும் நடைபெற உள்ளது. மகரஜோதிக்கு 5 நாட்கள் இருக்கும் நிலையில், இன்று தேவசம் போர்டு அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.