சென்னை: சென்னையில் கடந்த 13,14 ம் தேதிகளில் வாக்காளர் சிறப்பு முகாம்கள் நடைபெற இருந்த நிலையில் சென்னையில் கனமழையின் காரணமாக அன்று நடைபெற இருந்த வாக்காளர் சிறப்பு முகாம்கள் ரத்து செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து கடந்த 20ம் தேதி சனிக்கிழமை மற்றும் 21ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வாக்காளர் சிறப்பு முகாம்கள் நடைபெற்றது. இந்த சிறப்பு வாக்காளர் முகாமில் வாக்காளர் பட்டியலில் திருத்தங்களை (பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம், தொகுதி மாற்றம்) மேற்கொள்ள விரும்புகிறவர்கள், வாக்குச்சாவடிகளில் நடத்தப்படும் சிறப்பு முகாம்களுக்குச் சென்று அதற்கான விண்ணப்பங்களை அங்குள்ள அலுவலர்களிடம் பெற்று, பூர்த்தி செய்து அளிக்க வேண்டும். வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தப்பணிகள் 1ம் தேதி தொடங்கியது. வரும் 30ம் தேதிவரை நடைபெறுகிறது. அந்த தேதிக்குள் தகுதியுள்ள நபர்கள் தங்களை வாக்காளர்களாக பதிவு செய்து கொள்ளலாம். ஏற்கனவே பட்டியலில் பதிவு செய்யப்பட்டுள்ளவர்கள், அதில் தேவையான திருத்தங்களையும் அதற்கான விண்ணப்பங்களைக் கொடுத்து திருத்திக் கொள்ளலாம். அதன்படி கடந்த 20,21ம் தேதிகளில் கூடுதல் சிறப்பு முகாம்கள் மண்டலங்கள் 4, 5, 6, 8, 9, 10 மற்றும் 13க்குட்பட்ட சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளின் வாக்குச்சாவடிகளில் 500 சிறப்பு முகாம்கள் நடைபெற்றது. 20ம் தேதி நடைபெற்ற சிறப்பு வாக்காளர் முகாமில் 3,489 பேரும், 21ம் தேதி நடைபெற்ற முகாமில் 15,839 பேர் என 19,328 பேர் விண்ணப்பித்துள்ளனர். அதில் வாக்காளர் பெயர் சேர்க்க மட்டுமே 14,740 பேர் விண்ணப்பித்துள்ளனர் என்று அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். …
சென்னை மாநகராட்சியில் நடந்த சிறப்பு வாக்காளர் முகாமில் பெயர் சேர்ப்பு, திருத்தத்துக்கு 19,328 பேர் விண்ணப்பம்: பெயர் சேர்க்க மட்டும் 14,740 பதிவு; மாநகராட்சி அதிகாரிகள் தகவல்
previous post