சென்னை: பாமக தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கை: ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.8 லட்சத்தை இழந்து கடனாளியான மதுரை திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த ஆசிரியர் சரவணன் தொடர்வண்டி முன் பாய்ந்து தற்கொலை செய்திருக்கிறார். தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்டத் தடை நீக்கப்பட்ட இரு மாதங்களில் ஓர் ஆசிரியர் ரூ.8 லட்சத்தை இழந்திருக்கிறார் என்றால், ஆன்லைன் சூதாட்டம் தமிழ்நாட்டு மக்களை எந்த அளவுக்கு ஆக்டபஸ் போன்று வளைத்திருக்கிறது என்பதை உணர முடியும்.
இதுதடுக்கப்படாவிட்டால், நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழக்கக்கூடும். உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கின் விசாரணையை விரைவுபடுத்தி, ஆன்லைன் சூதாட்ட அரக்கனிடமிருந்து தமிழ்நாட்டு மக்களைக் காப்பாற்ற வேண்டும். அன்புமணி வெளியிட்டுள்ள மற்றொரு அறிக்கையில்,‘‘தமிழ்நாட்டில் அனைத்துத் தரப்பினரின் நலன் கருதி, முழு மதுவிலக்கை அரசு நடைமுறைப்படுத்த வேண்டும். தர்மபுரி மாவட்டம், காரியமங்கலம் அருகே குடிகாரர்களால் கொல்லப்பட்ட உழவர் சரவணன் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்’’ என தெரிவித்துள்ளார்.