சென்னை: சேலம் விவசாயிகள் மீதான வழக்கை கைவிட அமலாக்கத்துறை திட்டம் என தகவல் வெளியாகியுள்ளது. 2 விவசாயிகள் மீது சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கு பதிந்து அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது. ஏழை விவசாயிகளுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதற்கு அரசியல் கட்சியினர் உள்பட பல தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.