சென்னை: சென்னை நுங்கம்பாக்கத்தில் மறியலில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூ. மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கைது செய்யப்பட்டார். கே. பாலகிருஷ்ணனுடன் மார்க்சிஸ்ட் கட்சியினர் 400க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். தமிழக வெள்ள பாதிப்புக்கு ஒன்றிய அரசு நிதி வழங்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்தியது.