Sunday, October 6, 2024
Home » மரபுவழி மற்றும் நவீன பாணி ஓவிய, சிற்ப கலைஞர்கள் கலைச்செம்மல் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு அறிவிப்பு

மரபுவழி மற்றும் நவீன பாணி ஓவிய, சிற்ப கலைஞர்கள் கலைச்செம்மல் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு அறிவிப்பு

by Ranjith

சென்னை: மரபுவழி மற்றும் நவீன பாணி ஓவிய, சிற்ப கலைஞர்கள் கலைச்செம்மல் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து கலை பண்பாட்டு துறை இயக்குநர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டு துறை வாயிலாக, தமிழ்நாட்டை சேர்ந்த மரபுவழி கலை வல்லுநர்களுக்கும், நவீன பாணி கலை வல்லுநர்களுக்கும் நுண்கலை துறையில் செய்துள்ள சாதனைகளையும், சேவைகளையும் பாராட்டும் வகையில் ஆண்டுக்கு 6 கலைஞர்களுக்கு கலைச்செம்மல் என்னும் விருதும், தலா ரூ.1 லட்சம் பரிசு தொகையும் வழங்கி வருகிறது.

50 வயதுக்கு மேற்பட்ட மரபுவழி மற்றும் நவீன பாணி ஓவிய, சிற்ப கலைஞர்களிடம் இருந்து கலைச்செம்மல் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அதற்கான தகுதிகள்:

* படைப்பாளர்கள் விண்ணப்பம் செய்யலாம் அல்லது கலை அமைப்புகளோ, அரசு நிறுவனமோ, தனி நபர்களோ தகுதி வாய்ந்த கலைஞர்களை பரிந்துரைக்கலாம்.

* விண்ணப்பிக்கும் படைப்பாளர் நவீன பாணி அல்லது மரபுவழி பிரிவில் ஏதேனும் ஒரு பிரிவில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

* படைப்பாளிகளின் வெவ்வேறு காலக்கட்டத்தை சேர்ந்த குறிப்பிடத்தக்க 20 கலை படைப்புகளின் வண்ண ஒளிப்படங்கள் (A4 Size – Colour Photo) இணைத்தல் வேண்டும்.

* பத்திரிகையில் வெளிவந்த செய்திக்குறிப்புகள், கலை சார்ந்து வெளியிடப்பட்ட கட்டுரைகள், புத்தகங்கள், சான்றிதழ்கள் இணைத்திருக்க வேண்டும்.

* மாநில, தேசிய, உலக அளவில், தனியார் அமைப்புகள் நடத்திய கலைக்காட்சிகளில் படைப்பாளரின் கலை படைப்புகள் இடம் பெற்றிருத்தல் வேண்டும்.

* புகைப்படத்துடன் கூடிய முழு தன் விவரக்குறிப்பு இடம் பெறுதல் வேண்டும். ஆணையர், கலை பண்பாட்டு துறை, தமிழ் வளர்ச்சி வளாகம், இரண்டாம் தளம், தமிழ்ச்சாலை, எழும்பூர், சென்னை – 8 என்ற முகவரியில் வருகிற 20ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தொலைபேசி: 044-28193157.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

11 − 8 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi