மோதிஹரி: பீகாரில் பாலத்தின் அடியில் விமானம் சிக்கி கொண்ட காட்சி சமூக வலைதளங்களில் வைரலானது. ஏர் இந்தியாவுக்கு சொந்தமான விமானம் ஒன்று விபத்தில் சிக்கி பழுதானது. இந்த விமானம் உத்தரபிரதேசத்தின் லக்னோவில் இருந்து அசாமுக்கு மிகநீளமான லாரியில் ஏற்றி கொண்டு செல்லப்பட்டது. பீகார் மாநிலம் கிழக்கு சம்பராண் மாவட்டம் மோதிஹாரி பகுதியில் சென்று கொண்டிருந்த பிப்ரகோதி என்ற பாலத்தின் அடியில் சிக்கி கொண்டது. இதனால் அந்த பகுதியில் நீண்டநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்த போக்குவரத்து காவல்துறை மற்றும் அதிகாரிகள் நீண்ட போராட்டத்துக்குப்பின் பாலத்தின் அடியில் சிக்கிய லாரியை மீட்டனர். லாரி ஓட்டுநர் பாலத்தின் உயரத்தை தவறாக கணக்கிட்டதே இந்த சம்பவத்துக்கு காரணம் என காவல்துறையினர் தெரிவித்தனர். இதனிடையே பாலத்தின்கீழ் விமானம் பறக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
பீகாரில் பாலத்துக்கு கீழே சிக்கிய விமானம்: வைரலான வீடியோவால் பரபரப்பு
previous post