*சேனைக்கிழங்கை புளி நீரில் வேகவைத்து விட்டால் சாப்பிடும் போது வாயில் அரிப்பு நமைச்சல் ஏற்படாது.
*கூட்டு, குழம்பு இவற்றிற்கு அரிசி மாவை கரைத்து விடுவதற்கு பதில் பொட்டுக்கடலை மாவைக் கரைத்து விட்டால் சீக்கிரத்தில் கெட்டுப் போகாது. சுவையாகவும் இருக்கும்.
*பக்கோடா மாவுடன் சிறிது ரவையைக் கலந்து பக்கோடா செய்தால் ஆறிய பிறகும் பக்கோடா சுவையாகவும், மொறு மொறுப்பாகவும் இருக்கும்.
*முட்டைக் கோஸ் மீது சிறிது எண்ணெய் தடவி வைத்தால் கெட்டுப் போகாது.
*பிஸ்கட் போட்டு வைக்கும் போது, டப்பாவில் இரண்டு ஏலக்காய்களைத் தட்டிப் போட்டால் பிஸ்கட் ஏலக்காய் மணமுடன் சூப்பராக இருக்கும்.
*ஊறுகாய் செய்யப் பயன்படுத்தும் எண்ணெயை நன்றாக ஆவி வரும்வரை சூடாக்கவும், பிறகு குளிர வைக்கவும், இந்த எண்ணெயைப் பயன்படுத்தி ஊறுகாய் செய்தால் டேஸ்ட்டாகவும் இருக்கும். பூஞ்சனம் பிடிக்காமலும் இருக்கும்.
*வெண்ணெய் காய்ச்சி இறக்கும்போது அதில் சிறிது வெந்தயம் போட்டால் நெய் மணமாக இருக்கும்.
*வடைக்கு மாவு அரைக்கும் போது ஐஸ் தண்ணீர் ஊற்றி அரைத்தால் வடை மொறு மொறுப்பாகவும், அதிக சுவையுடனும் இருக்கும்.
*ஃப்ரிட்ஜின் ஃப்ரீசரில் அடிக்கடி ஐஸ் உறைந்து போவதைத் தடுக்க அதில் சிறிது உப்புத் தூளைத் தூவி விடவும்.
– அமுதா அசோக்ராஜா
குட்டிக் குட்டி வீட்டுக் குறிப்புகள்
previous post