*குளிப்பதற்கு நீரை சுட வைக்கும் போது அதில் சில மாவிலைகளைப் போட்டுக் கொதிக்க வைக்க உடல் சூடு தணிந்து, புத்துணர்ச்சி கிடைக்கும். நரம்பு களின் செயல்பாடு அதிகரிக்கும். சளி, தலைவலி தொல்லைகள் நீங்கும்.
*மழைக்காலத்தில் காய்ச்சல், சளி, தலைவலியால் பாதிக்கப்பட்டிருப்போர் எண்ணெயைக் காய்ச்சி, உச்சந்தலையில் நேரடியாக தடவாமல் உடல் மற்றும் தலைமுடி கால்களில் மட்டும் தடவிக் குளிக்கலாம்.
*குளிக்கும் நீரில் சிறிது இந்து உப்பைச் சேர்த்து குளிக்க நல்ல கிருமி நாசினியாகச் செயல்பட்டு உடல் கிருமிகள் நீங்க உதவும்.
*குளிக்கும் நீரில் ஒன்றிரண்டு வேப்பிலைகளைச் சேர்த்தும் குளிக்க நல்ல கிருமி நாசினியாக செயல்பட்டு உடல் சூடு தணியும். அதிகம் குளிர்ச்சி என்பதால் சளித்தொல்லை உள்ளவர்கள் தவிர்க்கலாம்.
*சுடுநீரில் சிறிது மஞ்சள் சேர்த்து குழந்தைகளுக்கு ஊற்ற மழைக்கால சளி, காய்ச்சல் போன்றவை கட்டுப்படும்.
*எண்ணெய்க் குளியல் காலத்தில் அதீத குளிர்ச்சித் தரும் பழங்கள், உணவுகளைத் தவிர்க்கலாம்.
*வருடத்தில் ஒருமுறையேனும், கங்கு வைத்து சாம்பிராணி போட்டு அதில் மஞ்சள் துண்டு, பூண்டு தோல்கள் சேர்த்து நுகர காய்ச்சல், சளி, நெஞ்சுச் சளிகள் அடங்கும். தலைவலி உள்ளிட்டப் பிரச்னைகளும் கூட குணமாகும்.
– கவின்
குளியல் டிப்ஸ்!
previous post