திருப்போரூர்: திருப்போரூரில் உடல் நலக்குறைவால் மரணமடைந்த விஜயகாந்த் படத்திற்கு, அனைத்து கட்சியினர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். சிறந்த நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் உடல் நலக்குறைவால் நேற்று மரணம் அடைந்தார்.
இதையடுத்து திருப்போரூர் மற்றும் கேளம்பாக்கம் பேருந்து நிலையங்களில் அவரது படம் வைக்கப்பட்டு தேமுதிகவினர் அஞ்சலி செலுத்தினர். இதைத்தொடர்ந்து திமுக, அதிமுக, மதிமுக, அமமுக, விடுதலை சிறுத்தைகள், புரட்சி பாரதம், மா.கம்யூ, இ.கம்யூ உள்ளிட்ட கட்சிகளின் நிர்வாகிகள், மக்கள் பிரதிநிதிகள் விஜயகாந்த் படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.