சென்னை: இந்திய ஹஜ் அசோஷியேஷன் தலைவர் பிரசிடெண்ட் அபூபக்கர் சென்னையில் அளித்த பேட்டி: 2024 ஹஜ் பயணம் 100 சதவீதம் டிஜிட்டல் செய்யப்பட்டு உள்ளது. இந்தியா முழுவதும் இருந்து 1.35 லட்சம் ஹஜ் விண்ணப்பங்கள் வந்து உள்ளது. தமிழகத்தில் ஹஜ் விண்ணப்பங்கள் வழங்க இன்னும் 16 நாள் அவகாசம் உள்ளது. இதுவரை 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஹஜ் விண்ணப்பங்கள் வந்து உள்ளன.
இந்த ஆண்டு ஹஜ் பயண ஒதுக்கீடு அதிகமாக கிடைக்க வாய்ப்புகள் உள்ளன. சென்னையில் இருந்து ஜித்தாவிற்கு நேரடி விமான சேவை பல ஆண்டுகளுக்கு பின் இயங்குகிறது. ஐந்தரை மணி நேரத்தில் செல்வதால் பயண நேரம் குறைகிறது. மேலும் 200 ரியால் முதல் 610 ரியால் வரை பணம் மிச்சம் ஆகும். நேரடி விமான சேவைக்காக பிரதமர் மோடிக்கும், சவுதி அரேபிய உம்ரா, ஹஜ் துறை அமைச்சருக்கும் நன்றி.