*குழந்தை பெற்ற தாய்மார்கள் சீரகத்தை தூளாக்கி வெல்லத்தில் சேர்த்து சாப்பிட்டு வர, பால் சுரப்பு அதிகரிக்கும்.
*வெள்ளெரிக்காயை அரைத்து முகத்தில் பூசி 15 நிமிடங்கள் கழித்து கழுவினால், முகப்பருக்கள் நீங்கி புத்துணர்ச்சி பொங்கும்.
*வாரத்திற்கு இரண்டு முறை பச்சைப் பயறு மாவை தயிரில் கலந்து தலையில் பூசி ஊற வைத்து குளித்தால் பொடுகு பிரச்னை நீங்கும்.
*தினமும் சப்போட்டா பழ ஜூஸ் பருகிவர முடி நன்றாக வளரும். முடி உதிர்வது நிற்கும்.
*தேங்காய் எண்ணெயில் நெல்லிக்காய் வற்றலை போட்டு காய்ச்சி, அந்த எண்ணெயை தலையில் தடவி வந்தால் முடி உதிர்வதை தடுக்கலாம்.
*டயட் இருந்து இளைக்கும் முயற்சியில் ஈடுபடுபவர்கள் நிறைய தண்ணீர் குடித்தால் சீக்கிரம் உடல் எடையை குறைக்கலாம்.
*கசகசாவை சில சொட்டு பசும் பாலில் கலந்து, விழுதாக அரைத்து முகத்தில் தேய்த்துக் கழுவினால் கரும்புள்ளிகள் மறையும்.
– அ. யாழினி பர்வதம்
மகளிர் மருத்துவம்
previous post