ஹைதரபாத் : நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் மறைவிற்கு நடிகர் பவன் கல்யாண் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நடிகர் பவன் கல்யாண் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “புரட்சிக் கலைஞர், தேமுதிக தலைவர் திரு.விஜயகாந்த் அவர்கள் காலமானார் என்பதை அறிந்து மிகவும் வேதனை அடைகிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். தமிழ் சினிமாவில் கதாநாயகனாக தனக்கென தனி இடத்தைப் பிடித்திருக்கும் திரு.விஜயகாந்த்தின் படங்கள் தெலுங்கு ரசிகர்களாலும் விரும்பப்படுகிறது. அவரது மனைவி ஸ்ரீமதி. பிரேமலதா அரசியல் பாதையை தொடர்வார் என நம்புகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.