நெல்லை: நெல்லையில் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளை அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நேற்று பார்வையிட்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். வண்ணார்பேட்டையில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்த அவர், மாநகர் மாவட்டம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிவாரண பொருட்களை வழங்கினார். தொடர்ந்து அவர், கைலாசபுரம், சி.என்.கிராமம், டவுன் வழுக்கோடை உள்ளிட்ட பகுதிகளுக்கும் சென்று பார்வையிட்டு அங்குள்ள மக்களிடம் குறைகளை கேட்டறிந்து நிவாரண உதவிகளை வழங்கினார்.