புழல்: புழல் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம் ஒன்றிய குழு தலைவர் தங்கமணி திருமால் தலைமையில் நேற்று நடந்தது. புழல் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்களின் கூட்டம் ஒன்றிய கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு, ஒன்றியக்குழு தலைவர் தங்கமணி திருமால் தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு துணை தலைவர் சாந்தி பாஸ்கரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மணி, சேகர், சித்ரா, பெர்னாண்டோ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் வடகரை, கிரான்ட்லைன் தீர்த்தங்கரையம்பட்டு, சென்றம்பாக்கம், விளாங்காடுப்பாக்கம், அழிஞ்சிவாக்கம், புள்ளிலைன் ஆகிய 7 ஊராட்சிகளில் செய்ய வேண்டிய அடிப்படை வசதிகள் குறித்தும், சமீபத்தில் பெய்த மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஏற்பட்ட மழை பாதிப்புகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் ஒன்றிய பொது மேலாளர் உமா மகேஸ்வரி, ஒன்றிய கவுன்சிலர் சிவக்குமார், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஒன்றிய அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.