நெல்லை: மழை வெள்ளத்தால் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். மழை பாதிப்பை ஆய்வு செய்யாமல் நிவாரண உதவிகளை முதல்வர் எப்படி கேட்க முடியும்? என்று கேள்வி எழுப்பிய எடப்பாடி பழனிசாமி, தமிழக வெள்ள பாதிப்புகளுக்கு ஒன்றிய அரசு உரிய உதவிகளை செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.