கான்கெர்: சட்டீஸ்கரின் கான்கெர் மாவட்டத்தில் சடாக்டோலா கிராமத்தில் எல்லைப்பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் மாநில போலீஸ் படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது நக்சல்கள் நடத்திய குண்டு வெடிப்பில் எல்லைப் பாதுகாப்பு படை வீரர் படுகாயமடைந்தார். உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். உயிரிழந்த வீரர் அகிலேஷ் ராய், உத்தரப்பிரதேசத்தை சேர்ந்தவர்.