பெங்களூரு: கர்நாடக வனப்பகுதியில் 70 யானைகள் கொண்ட கூட்டம் நடமாடுவதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆந்திர எல்லையை ஒட்டிய கர்நாடக பகுதியான சாந்திபுரம், குப்பம்பகுதி மக்கள் கவனமுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. கர்நாடக எல்லை வனப்பகுதியில் இருந்து 70 யானைகளும் ஆந்திர பகுதியை நோக்கிச் செல்வதாக வனத்துறை தகவல் தெரிவித்துள்ளது.