கர்நாடகா: மகாராஷ்டிரா, கர்நாடகாவில் தேசிய புலனாய்வு முகாமை அதிகாரிகள் நடத்திய சோதனையில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் 15 பேரை கைது செய்துள்ளனர். மகாராஷ்டிரா, கர்நாடகாவில் 44 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தினர். தானே மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மட்டும் 40 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர்.