*அத்தி, கிஸ்மின் போன்றவற்றை ஃபிரிட்ஜில் வைத்தால் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும்.
*எந்த வகை சூப்பாக இருந்தாலும் அதனுடன் இட்லியை உதிர்த்து எண்ணெயில் பொரித்துப் போட்டால் சுவையாக இருக்கும்.
*அக்ரூட் முழுதாக சிறிது நேரம் வெந்நீரில் ஊறவைத்தால் எளிதாக உடைக்கலாம்.
*மோரில் பச்சை மிளகாய்க்கு பதில் சிறிது சுக்கைப் பொடித்து சேர்த்தால் சுவையாக இருக்கும்.
*சாம்பார், கூட்டு, நீர்த்துப் போனால் அதை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, இரண்டு புது பிரெட் துண்டுகளை போட்டு பத்துநிமிடம் ஊறவைத்து மசித்துவிட வேண்டும். சாம்பார், கூட்டு கெட்டியாகி ருசியாக இருக்கும்.
*பொரிப்பதற்கு வைத்திருக்கும் எண்ணெயில் தண்ணீர் கலந்திருந்தால் ஒரு துண்டு வாழைஇலையை போட்டு வைக்கலாம். எண்ணெய் வெடிப்பது குறையும்.
*கபாப் செய்யும்போது இரண்டு பிரெட் துண்டுகளை நனைத்து பிசைந்து போட்டால் கபாப் உடையாமல் இருக்கும்.
*வாழை, ஆப்பிள், பேரிக்காய் போன்ற பழங்களை துண்டுகளாக வெட்டி எலுமிச்சைச் சாறு கலந்து வைத்தால் நிறம் மாறாமல் இருக்கும்.
*கடலை மாவுடன் பாதி அளவு பார்லி மாவு சேர்த்து பக்கோடா செய்தால் ருசியாக இருக்கும்.
*தானியங்களை எட்டுமணி நேரம் ஊறவைத்து தண்ணீரை வடித்து, ஹாட்பேக்கில் போட்டு மூடிவைத்தால் மறுநாள் முளைகட்டிய தானியம் தயார்.
*கோதுமை மாவில் வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி, பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து பக்கோடா செய்தால் மிகவும் ருசியாக இருக்கும்.
*முருங்கைப் பிஞ்சுகளை சிறு துண்டு களாக நறுக்கி, ரசத்தில் போட்டு கொதிக்க வைத்தால் ரசம் ருசியாக இருக்கும்.
*வடு மாங்காய் போட்டு சாறு மீந்து விட்டால் அதில் கொத்தவரங்காய், பாகற்காய் போன்றவற்றை ஊற போட்டு காயவைத்தால், எண்ணெயில் பொரித்து உபயோகிக்கலாம்.
– அ.ப. ஜெயபால்