திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி, கூத்தாநல்லூரில் வருவாய் ஆய்வாளர், மின்வாரிய கேங்மேன் லஞ்சம் வாங்கியதால் கைது செய்யப்பட்டனர். மன்னார்குடி நகராட்சி வருவாய் ஆய்வாளர் தனபால் ரூ.6,000 லஞ்சம் பெற்றபோது கையும் களவுமாக கைது செய்யப்பட்டார். கூத்தாநல்லூர் மின்வாரிய கேங்மேன் ஆனந்த் ரூ.2,000 லஞ்சம் வாங்கும்போது லஞ்ச ஒழிப்புத்துறையால் கைது செய்யப்பட்டார்.