சென்னை: எங்கெங்கு தண்ணீர் தேங்கியுள்ளதோ அங்கு சிறப்பு முயற்சி எடுத்து மழைநீரை அகற்ற வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். அனைத்து இடங்களுக்கும் உடனே மின் இணைப்பை வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு மருந்து, அரிசி, பருப்பு, பால், மளிகைப் பொருட்களை வழங்கவேண்டும். தேவையான மருத்துவ வசதிகளையும் உடனடியாக வழங்க தமிழ்நாடு அரசுக்கு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியிருக்கிறார்.