சென்னை : சென்னையில் உள்ள பெட்ரோல் பங்க்குகளில் டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. புயல் மழைக்கு பிறகு பெட்ரோல் பங்க்குகள் மீண்டும் செயல்பட தொடங்கிய போதும் டீசல் தட்டுப்பாடு நிலவுகிறது. சென்னையில் பெரும்பாலான பங்க்குகளில் பெட்ரோல் தட்டுப்பாடின்றி கிடைக்கிறது. ஜெனரேட்டர்களை இயக்குவதற்காக பெருமளவில் டீசல் வாங்கிச் செல்லப்படுவதால் டீசலுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. கார்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டதன் காரணமாக பலர் பெட்ரோல், டீசலை கேன்களில் வாங்கிச் செல்கின்றனர்.