புதுடெல்லி: ராஜஸ்தான் மாநிலம் கரன்பூர் சட்டப்பேரவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் குர்மீத்சிங் காலமானதால் அங்கு மட்டும் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. அங்கு ஜன.5ல் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மனுத்தாக்கல் டிச.12ல் தொடங்குகிறது. 19ம் தேதி வரை மனு செய்யலாம். ஜனவரி 8ம் தேதி ஓட்டு எண்ணிக்கை என தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.