சென்னை: 10 மாதங்களாக 1,000 மருத்துவர்களை நியமிக்கப் போராடிக் கொண்டிருக்கிறோம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி அளித்துள்ளார். மருத்துவர்கள் வழக்கு தொடர்வதால் காலிப் பணியிடங்களை நியமிப்பதில் சிக்கல் உள்ளது. மருத்துவர்களுக்கு எந்த பிரச்னையாக இருந்தாலும் எங்களிடம் வந்தால் பேசி முடிவுக்கு வரலாம் எனவும் அவர் பேசியுள்ளார்.