தண்டையார்பேட்டை: கொருக்குப்பேட்டை ரயில் நிலைய நடைமேடையில் நேற்று 50க்கும் மேற்பட்ட மூட்டைகளுடன் இருந்தவர்கள், ரயில்வே போலீசாரை பார்த்ததும் மூட்டைகளை அங்கேயே விட்டுவிட்டு தப்பினர். அவற்றை சோதனை செய்தபோது, 800 கிலோ ரேஷன் அரிசி இருந்தது. அதை பறிமுதல் செய்து குடிமைப் பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதுபற்றி அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.