கோத்தகிரி: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கேர்க்கம்பை பகுதியில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் கூக்கல்தொரை பகுதியை சேர்ந்த ரவி-சோபனா தம்பதியின் மகள் லயா (4) எல்கேஜி படித்து வந்தார். வழக்கம்போல் நேற்று காலை பள்ளி பேருந்தில் லயா பள்ளிக்கு சென்றுவிட்டு, மீண்டும் மாலையில் பள்ளி பேருந்து முலம் வீடு திரும்பி கொண்டிருந்தார். லயாவை கூக்கல்தொரை பகுதியில் ஓட்டுநர் இறக்கிவிட்டார். பேருந்தில் இருந்து இறங்கிய லயா பேருந்திற்கு பின்புறம் நின்றதாக தெரிகிறது. இதை கவனிக்காத ஓட்டுநர் பேருந்தை பின்னோக்கி இயக்கியுள்ளார். இதில் சிறுமி பேருந்தின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.