சென்னை: அசோக் நகர் காவல் பயிற்சி கல்லூரியில் பொதுமக்கள் வரும் டிசம்பர் 5ம் தேதி நேரில் மனு அளிக்கலாம் என்று கூடுதல் டிஜிபி, குற்றம் மற்றும் உறுப்பினர் செயலாளர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: அசோக்நகர், சென்னை காவல் பயிற்சி கல்லூரி அலுவலகத்தில், காவல் துறையின் பணியை செம்மையாக்கும் வண்ணம், தமிழ்நாடு அரசு 2022ம் ஆண்டு 5வது காவல் ஆணையம் அமைத்துள்ளது. காவல் பணியினை செம்மைப்படுத்த பொதுமக்களிடமிருந்து கருத்துகள் வரவேற்கப்படுகின்றன.
தபால் மூலம் தெரிவிக்க விரும்புவோர் தலைவர், 5வது காவல் ஆணையம், காவல் பயிற்சி கல்லூரி வளாகம், அசோக் நகர், சென்னை-83. மின் அஞ்சலில் அனுப்ப விரும்புவோர் கீழ்க்கண்ட மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம். E-Mail ID fifthpolicecommision@gmail.com.நேரில் மனு அளிக்க விரும்புவர்கள் டிசம்பர் 5ம் தேதி காலையில் 10.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை மேற்கண்ட முகவரியில் சமர்ப்பிக்கலாம். மேல் விவரங்களுக்கு 9791987112 செல்போனில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு கூடுதல் காவல்துறை இயக்குநர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.