சென்னை: நாட்டின் தொழில் முதலீடு, உட்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அனைத்து மாநில முதலமைச்சர்கள் மற்றும் நிதியமைச்சர்களுடன் நேற்று முன்தினம் (15ம் தேதி) வீடியோ கான்பரன்சிங் வாயிலாக நடத்திய ஆலோசனை கூட்டத்தில் தமிழ்நாட்டின் சார்பாக நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாவது: கொரோனா சவாலை எதிர்கொண்ட போதிலும், வருவாய் வரவுகளை ஈட்டுவதிலும் தொழில் முதலீட்டிலும் தமிழ்நாட்டின் பொருளாதாரம் மீண்டெழுந்து வருகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த இரண்டு தொழில் முதலீட்டு கூட்டங்களில் ரூ.21,021 கோடி மதிப்பிலான முதலீடுகள் மற்றும் ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் விதமாக 50 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டது.மதுரை விமான நிலையத்தினை விரைவில் சர்வதேச விமான நிலையமாக அறிவிக்க வேண்டும். புறத் துறைமுக திட்டத்துடன் தூத்துக்குடி துறைமுகத்தை விரிவாக்குவதற்கான பெருந்திட்டம் ஒன்றினை விரைவில் செயல்படுத்தப்பட வேண்டும். தொழிற்சாலைகளுக்கான தளவாட செலவினை குறைக்கும் வகையில் சென்னை – கன்னியாகுமரி சாலை முழுவதையும் எட்டு வழிச்சாலையாக மேம்படுத்தவும், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் நிலுவையில் உள்ள 11 நெடுஞ்சாலை திட்டங்களை விரைந்து நிறைவேற்ற வேண்டும். …
தமிழ்நாட்டில் உட்கட்டமைப்பை மேம்படுத்த சென்னை-குமரி சாலையை 8 வழி சாலையாக்க வேண்டும்: ஒன்றிய அரசுக்கு நிதி அமைச்சர் வலியுறுத்தல்
previous post