திருப்பூர், நவ. 19:சாலையோர வியாபாரிகளுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பது குறித்த ஆலோசனை கூட்டம், மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் தினேஷ்குமார் தலைமையில் நடந்தது. கமிஷனர் பவன்குமார் முன்னிலை வகித்தார். உதவி ஆணையர் சுல்தானா மற்றும் பலர் கலந்துகொண்டனர். இது குறித்து கமிஷனர் பவன்குமார் கூறியதாவது:
திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகள் கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது. இதுவரை 1250க்கும் மேற்பட்டவர்கள் வரை கணக்கெடுக்கப்பட்டுள்ளது. இந்த சாலையோர வியாபாரிகள் மாநகராட்சி பகுதிகளில் வியாபாரம் செய்யும் பகுதிகளும் அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த இடங்களில் அவர்களுக்கு கழிவறை வசதி மற்றும் பொருட்களை இருப்பு வைக்கும் அறை போன்றவை செய்து கொடுப்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.