திருச்செங்கோடு, நவ.17: திருச்செங்கோடு செங்குந்தர் கல்வி நிறுவனங்களில் தேசிய மாணவர் படை, இளைஞர் செஞ்சிலுவை சங்கம், ரெட் ரிப்பன் கிளப், நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் திருச்செங்கோடு அரசு மருத்துவமனை ரத்த வங்கியுடன் இணைந்து ரத்த தானம் முகாம் நடைபெற்றது. முகாமை கல்லூரி தாளாளர் மற்றும் செயலர் பாலதண்டபாணி தொடங்கி வைத்தார். செங்குந்தர் பொறியியல் கல்லூரி முதல்வர் சதீஷ்குமார், மருந்தியல் கல்லூரி முதல்வர் சுரேந்திரகுமார், செவிலியர் கல்லூரி முதல்வர் நீலாவதி, வேலைவாய்ப்பு பயிற்சி துறை இயக்குனர் அரவிந்த் திருநாவுக்கரசு மற்றும் துறை பேராசிரியர்கள், மாணவ- மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டு ரத்த தானம் வழங்கினர். திருச்செங்கோடு அரசு மருத்துவமனையின் டாக்டர் செந்தில்குமார் மற்றும் செவிலியர்கள் கலந்து கொண்டனர். ரத்த தானம் செய்தவர்களுக்கு, அரசு மருத்துவமனை சார்பில் தமிழ்நாடு மாநில குருதிப் பரிமாற்றுக் குழுமத்தால் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
ரத்த தான முகாம்
previous post