சென்னை : மழைக்காலம் முடிந்ததும் சனிக்கிழமைகளில் வாரம் தோறும் பள்ளிகளுக்கு வேலை நாள் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், அதனை ஈடு செய்யும் வகையில் பள்ளிக்கல்வித்துறை இவ்வாறு நடவடிக்கை எடுத்துள்ளது.சனிக்கிழமைகளில் வகுப்புகள் நடத்துவது குறித்து அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் முடிவு செய்து கொள்ளலாம்.