உசிலம்பட்டி. நவ. 11: உசிலம்பட்டியில் ஹெல்மெட் அணிந்து டூவீலர்களில் வந்தவர்களுக்கு தீபாவளி ஸ்வீட் கொடுத்து போலீசார் இன்ப அதிர்ச்சி அளித்தனர். உசிலம்பட்டி தேவர் சிலை அருகே போக்குவரத்து போலீஸ் எஸ்.ஐ சௌந்தர் தலைமையில் போலீசார் அந்த வழியாக டூவீலர்களில் ஹெல்மெட் அணிந்து வந்தவர்களுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஸ்வீட் பாக்ஸ் வழங்கி இன்ப அதிர்ச்சி அளித்தனர்.
சமூக ஆர்வலர் தமிழரசன் தனியார் அமைப்புடன் சேர்ந்து இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். சமீப காலமாக டூவீலர் விபத்துகள் அதிகம் நடப்பதால், தீபாவளி நேரத்தில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கோடு இந்த இனிப்பான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.
இதில் உசிலம்பட்டி நகர் எஸ்.ஐ பாண்டியராஜன் மற்றும் போலீசார், சமூக ஆர்வலர்கள் உசிலை சேகரன், பெருமாள், சிந்தா, கனிஷ் குமார், சசி உட்பட பலர் கலந்து கொண்டனர்.