காஞ்சிபுரம்: முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேரு பிறந்தநாள் ஆண்டுதோறும் நவம்பர் 14ம் தேதி குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. தற்போதைய கால சூழ்நிலையில் குழந்தைகள் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. இதை தவிர்க்கும் பொருட்டு குழந்தைகள் பாதுகாப்பு அலகு மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் குழந்தைகள் நமது நண்பர்கள் எனும் விழிப்புணர்வு வாசகத்தை முன்னிறுத்தி விழிப்புணர்வு மேற்கொள்ள திட்டமிடப்பட்டது. இந்நிலையில் காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலக அறையில் மாவட்ட குழந்தைகள் நல அமைப்பு சார்பில் குழந்தைகள் நமது நண்பர்கள் எனும் போஸ்டர் மற்றும் குழந்தைகள் கையில் அணியும் பட்டைகள் மற்றும் இனிப்பு வழங்கி கொண்டாடினர். அப்போது, கலெக்டர் ஆர்த்தி, குழந்தைகள் நமது நண்பர்கள் எனும் வாசகம் கொண்ட கைப்பட்டையை குழந்தைகள் கையில் அணிவித்தார். நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் மதியழகன், ஹேண்ட் இன் ஹேண்ட் மோகனவேல் உள்பட பலர் பங்கேற்றனர்….
குழந்தைகள் நமது நண்பர்கள் கைப்பட்டை வெளியீடு: கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டார்
previous post