டெல்லி: நடிகை ராஷ்மிகாவின் போலி வீடியோ விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்கக்கோரி டெல்லி காவல்துறைக்கு மாநில மகளிர் ஆணையம் நோட்டீஸ் வழங்கியுள்ளது. ராஷ்மிகாவின் போலி வீடியோ விவகாரத்தில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டி நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. போலி வீடியோவை வெளியிட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டெல்லி மகளிர் ஆணைய தலைவர் ஸ்வாதி மாலிவால் தெரிவித்துள்ளார்.