டெல்லி: இருநாட்டு நல்லுறவு தொடர்பாக இந்தியா, அமெரிக்கா இடையே இருதரப்பு பேச்சுவார்த்தை நாளை நடக்கிறது. அமெரிக்கா, இந்தியா பாதுகாப்பு மற்றும் வெளியுறவுத்துறை இடையே பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சுவார்த்தையில் பங்கேற்றுள்ளார். அமெரிக்க அமைச்சர்கள் லாயிட் ஆஸ்டின், ஆண்டனி பிளிங்கின் உடன் ராஜ்நாத் சிங், ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.