கடலூர்: கடலூர் மாநகராட்சி மாமன்ற கூட்டம் நேற்று நடைபெற்றது. மேயர் சுந்தரி ராஜா தலைமை தாங்கினார். அப்போது பாஜ கவுன்சிலர் சக்திவேல் திடீரென திருட்டு வழக்கு ஒன்று தொடர்பாக விளக்கம் அளித்து இதற்கு காரணமானவர்கள் என சிலரை குறிப்பிட்டு அவதூறாக பேசினார். இதையடுத்து அவதூறாக பேசியதற்காக அவரை 2 கூட்டத்துக்கு சஸ்பெண்ட் செய்து மேயர் சுந்தரி ராஜா உத்தரவிட்டார்.