திருப்புவனம், நவ.5: மேலூர் அருகே கீரனூரில் துக்க வீட்டிலிருந்து மயானத்துக்கு சென்ற வழியில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. மழைக்கு மரத்திற்கு கீழே ஒதுங்கியவர்கள் மீது மின்னல் தாக்கியது. இதில் 15க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டனர். இந்த சம்பவத்தில் செல்வக்குமார், அக்கினீஸ்வரன் இருவர் பலியாகினர். திருப்புவனம் அருகே மேல பூவந்தியை சேர்ந்த அக்கினீஸ்வரன் உடல் திருப்புவனம் அரசு மருத்துவமனையில் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மானாமதுரை எம்எல்ஏ தமிழரசி ரவிக்குமார் நேற்று காலை மேல பூவந்தி சென்றார். அக்கினீஸ்வரன் தாயார் செல்வியிடம் ஆறுதல் கூறினார். அவருடன் ஊராட்சி தலைவர் விஜயா ஆறுமுகம், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணைத்தலைவர் பன்னீர்செல்வம், மடப்புரம் கார்த்திக் ஆகியோர் சென்றனர்.