கரூர்: குளித்தலை அருகே இடையபட்டியில் மூதாட்டி வெள்ளத்தாய் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 28-ம் தேதி தனது வீட்டின் அருகே காயங்களுடன் உயிரிழந்த நிலையில் மூதாட்டி வெள்ளத்தாய் மீட்கப்பட்டார். விசாரணையில் நிலப்பிரச்சனையில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக மூதாட்டி கொலை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.