மதுரை: பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அரசு வழங்கும் நிதி சமூக நலனுக்காக மட்டும்தான் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. தென்காசி மாவட்டத்தை சேர்ந்த கல்யாணி என்பவர் தாக்கல் செய்த மனு மீது உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது. அரசு உதவி பெறும் பள்ளி நிர்வாகம் தனியாக நிர்வாகத்தை நடத்தி, அரசுக்கு பிரச்சனைகளை ஏற்படுத்தக் கூடாது. மானியம் பெரும் கல்வி நிறுவனங்களை முறையாக நடத்தவில்லை என்றால் தேவையில்லாமல் வழக்கு தொடர்ந்து நேரத்தை வீணடித்தால் மானியத்தை திரும்பப்பெற வேண்டும் என ஐகோர்ட் கிளை நீதிபதி கூறியுள்ளார்.