சென்னை: சென்னை திருவெற்றியூரில் காமராஜ் என்பவரை 6 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டி விட்டு தப்பி சென்றனர். விம்கோ நகரில் அலுவலக வாசலில் வைத்து காமராஜை வெட்டிய கும்பல் குறித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் காமராஜுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.