நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் எர்ணாபுரம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலைய தலைமை மருத்துவர் ராஜேந்திரன் பணியிடை நீக்கம் செய்துள்ளார். போலி ஜாதிச் சான்றிதழ் கொடுத்து மருத்துவம் பயின்று பணியில் சேர்ந்ததாக எழுந்த புகாரில் நடவடிக்கை எடுத்துள்ளனர். தலைமை மருத்துவர் ராஜேந்திரனை பணியிடை நீக்கம் செய்து பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் உத்தரவு அளித்துள்ளார்.