சென்னை: சென்னையில் ஏற்படும் வெள்ளத்தை அளவீடுவதற்கு அடி முறையை சென்னை மாநகராட்சி அறிமுகம் செய்துள்ளது. சுரங்க பாலங்கள், ஆற்று முகத்துவாரங்களில் 44 இடங்களில் சென்னை மாநகராட்சி அடி அளவீடுகளை வரைந்துள்ளது. வெள்ளம் ஏற்படும் போது கட்டுப்பாட்டு அறையில் இருந்து கள நிலையை அறிந்து பொது மக்களை பாதுகாக்கும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.